ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு சூர்யாகர் திட்டத்தை அறிவித்துள்ளது. சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதும், இயற்கை வளங்கள் மற்றும் மின் உற்பத்தியை சார்ந்திருப்பதைக் குறைப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தி ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்ட வாய்ப்புகள் உள்ளன. இந்த திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்தினால் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் கணிசமாக குறைவதுடன் காற்று மாசு அளவும் குறையும்.
பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான 9 வழிகள்:
1: அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
2: பதிவு செய்வதற்காக தனிப்பட்ட விவரங்களை என்டர் செய்யவும்.
3: கஸ்டமர் நம்பர் மற்றும் மொபைல் நம்பர் உடன் லாகின் செய்யவும்.
4: வீட்டின் கூரையில் சோலார் பேனல் பொருத்துவதற்கு விண்ணப்பிக்கவும்.
5: ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பவும்.
6: DISCOM ஒப்புதலுக்காக காத்திருங்கள். அங்கீகாரம் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட மின் விநியோக நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் வந்து யூனிட்டை நிறுவுவார்கள்.
7: ஆன்லைன் இன்ஸ்டலேஷன் முடிந்ததும், யூனிட்டின் விவரங்களைச் சப்மிட் செய்து, நெட் மீட்டருக்கு விண்ணப்பிக்கவும்.
8: நெட் மீட்டர் பொருத்திய பின், மின்பகிர்மான நிறுவனம் (DISCOM) வந்து, வீட்டை சோதனை செய்யும். அதன் பிறகு அதிகாரிகள் போர்ட்டலில் இருந்து அனுமதி கடிதத்தை வழங்குவார்கள்.
9: சோலார் யூனிட் தொடங்குவதற்கான அனுமதி கடிதம் கிடைத்ததும், போர்ட்டல் மூலம் வங்கி விவரங்களையும், கேன்சல் ஆன செக் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். 30 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் மானியம் கிடைக்கும்.
எப்படி நேரடியாக விண்ணப்பிப்பது?
https://pmsuryaghar.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விவரங்கள் பதிவிட்டு, இதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
March 02, 2025 4:10 PM IST
PM Surya Ghar Muft Bijli Yojana: இலவசமா மின்சாரம் பயன்படுத்த வேண்டுமா.. அப்போ இந்த திட்டத்துக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

