சிறிலங்கா திறைசேரியில் நடந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி மையத்தில் உயர்அதிகாரி ஒருவரின் உடல்நரம்புகள் அறுக்கப்பட்ட குருர தற்கொலையின் பின்னணியில் இந்த மோசடியின் நதிமூலம் ரிசிமூலம் குறித்து இதுவரை எந்த துப்புகளும் கிட்டவில்லை.
இப்போது அமெரிக்காவின் FBI (ஃபெடரல் பீரோ ஒஃப் இன்ஸ்வெஸ்ரிகேசன்) அமைப்பின் கால்களில் சிறிலங்கா விழுந்துவிட்ட நிலையில் மறுபுறத்தே இணைய மோசடி குழுக்களை தேடி உள்ளுர் அதிரடிகளும் இடம்பெறுகின்றன.
நேற்று நடத்தப்பட்ட முதல் ஒப்ரேசனில் ஒரு பெண் உட்பட முப்பத்தேழு சீனர்கள் தலங்கமவின் கொஸ்வத்த பகுதியில் மாட்டிய நிலையில் கொழும்பின் புறநகரான ராஜகிரிய பகுதியில் நடத்தப்பட்ட ஒப்ரேசனில் சிறிலங்கா காவற்துறையையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் நூற்றுக்குமேற்பட்ட வெளிநாட்டவர்களை கொண்ட மெகா குழு சிக்கியுள்ளது.
ஒரு கட்டிடத்தில் பல தளங்களை வாடகைக்கு எடுத்து, இந்தக குழு தமது அதிநவீன மோசடித்தொழிலை நடத்திய நிலையில் காவற்துறையின்; இந்த ஒப்ரேசனில் பிடிபடாமல் பலர் அங்கிருந்து தப்பி ஓடியும்விட்டனர்.
இப்படி உள்ளுரில் இயங்கும் குழுக்களும் சிறிலங்கா திறைசேரியில் கைவைத்தார்களா என்ற ஐயம் இருந்தாலும் இப்போது இந்த விடயம் ஒரு சர்வதேச விசாரணையாக மாறிய நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

