கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி குறித்த வழக்கு இன்றைய தினம் (07.03.2025) தொலைக்காணொளி (Skype) மூலம் விசாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
கொலை விசாரணை
அதற்கமைய, நீதிமன்றப் பதிவகம் இது தொடர்பில் சிறை அதிகாரிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவித்துள்ளது.

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொண்டு நீதவான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான விரிவான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையும் தனி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறையின் OIC, தலைமை ஆய்வாளர் எஸ். கே. சேனாரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வந்து தொடர்புடைய விசாரணைகளைத் தொடங்கியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

