தண்டனைக்கு முன்பாக,”எனது மரணம் இந்தப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடங்கி வைக்கும்” என்று கவான் கூறியிருந்தார். அதுவே, தீர்க்கதரிசனமாக அமைந்தது. அவர் கூறியபடியே, கவான் கொல்லப்பட்ட ஓராண்டிலேயே சுல்தானும் குற்றவுணர்ச்சியால் இறந்தார். கவானின் மரணத்தைத் தொடர்ந்து, அடுத்த சில ஆண்டுகளிலேயே மாபெரும் பாமினிப் பேரரசு பீஜப்பூர், அகமதுநகர், கோல்கொண்டா, பீடார், பெரார் என ஐந்து சிறு சுல்தானியங்களாகச் சிதறுண்டு, இந்திய வரைபடத்திலிருந்தே முற்றிலுமாக அழிந்து போனது.


