• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்திய இளைஞர்களின் குற்றச்செயல்கள்- யார்தான் காரணம்? – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
August 13, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
இந்திய இளைஞர்களின் குற்றச்செயல்கள்- யார்தான் காரணம்? – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இனப் பாகுபாடு , ஓரங்கட்டப்படுதல் முக்கியப் காரணியாக உருவெடுத்துள்ளன என்கிறார் இராமசாமி. ப. இராமசாமி உரிமைத் தலைவர் .

இந்திய இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக அண்மையில் வெளியான ஒரு கட்டுரை, பெற்றோரின் போதிய வழிகாட்டுதல் இல்லாமை, வறுமை, குற்றச்செயல்களில் ஈடுபடுத்தும் ஆட்கள் மற்றும் இதர காரணங்களால் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகக் குறிப்பிடுகிறது.

இந்தியர்கள் எதிர்கொள்ளும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியான ஓரங்கட்டப்படுதல் குறித்து அதில் ஓரளவு மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தனிநபர், குடும்பம் மற்றும் சமூக காரணிகளையே முக்கிய காரணங்களாகக் காட்டி, இந்தப் பெரிய பிரச்சினை பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.இந்திய இளைஞர்களின் குற்றச்செயல்

மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் இந்தியர்களின் விகிதத்துடன் ஒப்பிடுகையில், இந்திய இளைஞர்களின் குற்றச்செயல் ஈடுபாடு அதிகமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

அரசுப் பணியிலும் வணிகத் துறையிலும் இந்தியர்கள் சமமான அளவில் பிரதிநிதித்துவம் பெறாத நிலையில், இரகசியக் கும்பல்களின் செயல்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களில் இந்தியர்களின் ஈடுபாடு மலேசியாவின் சமூக நிலப்பரப்பில் தொடர்ந்து கவலைக்குரிய அம்சமாக உள்ளது.

மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் ஒப்பீட்டளவில் சிறிய அளவிலேயே இருந்தாலும், குண்டர் கும்பல்களின் உறுப்பினர்களில் அவர்கள் அதிகமாக இடம்பெறுவதாகத் தெரிகிறது.

சட்ட அமலாக்க நடவடிக்கைகளால் மட்டும் தீர்க்க முடியாது.

அரசாங்கமும் குறிப்பாகக் காவல்துறையும் இந்தப் பிரச்சினையை சட்டம்-ஒழுங்கு என்ற கோணத்திலேயே முக்கியமாக அணுகுகின்றன. காவல்துறையின் பார்வையில் இது புரிந்துகொள்ளக்கூடியதாகும். ஆனால், சில இளைஞர்களைக் குற்றச்செயல்களுக்குத் தள்ளும் அடிப்படைக் காரணங்களைச் சட்ட அமலாக்க நடவடிக்கைகளால் மட்டும் தீர்க்க முடியாது.

இந்திய இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு காரணமாக இருக்கும் உண்மையான கட்டமைப்பு மற்றும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் இதர நிறுவனங்கள் போதுமான கவனம் செலுத்தவில்லை.

சூழ்ந்துள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூகச் சூழல்

இந்தியர்கள் பிறப்பிலேயே குண்டர்த்தனத்துக்கு அல்லது குற்றச்செயல்களுக்கு ஆளாகக்கூடியவர்கள் அல்லர். சில இந்திய இளைஞர்கள் தங்களைச் சூழ்ந்துள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூகச் சூழலே அவர்களை இத்தகைய நடவடிக்கைகளுக்குத் தள்ளக்கூடும்.

இந்திய இளைஞர்களிடையே குண்டர் கலாசாரத்தைக் குறைப்பதில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுக்கு நிச்சயமாக முக்கியப் பங்கு உண்டு. ஆனால், இதற்கான முழுப் பொறுப்பையும் பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் மீதே சுமத்துவது மிகப் பெரிய பிரச்சினையைப் புறக்கணிப்பதாகும்.

இந்தியர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவது

அந்தப் பிரச்சினை வேறொன்றுமல்ல — இனப் பாகுபாடும், நாட்டில் இந்தியர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதும் ஆகும்.

அரசுப் பணியாளர்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் மலாய்க்காரர்களாக இருக்கும் நிலையில், இந்தியர்கள் அரசுத் துறையில் அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளைப் பெறுவதைப் பற்றி ஏறக்குறைய மறந்துவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியர்கள் அரசுப் பணியில் சேர்க்கப்பட்டாலும், அவர்கள் பெரும்பாலும் அடிநிலைப் பதவிகளுக்குள் மட்டுப்படுத்தப்படுகின்றனர். அரசுப் பணியின் உயர் நிலைகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு குறைவாகவே உள்ளன.

தனியார் துறையிலும் நிலைமை பெரிதாக மாறுபட்டதாக இல்லை.

வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மலாய்க்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் அரசாங்கக் கொள்கைகளும் ஒதுக்கீடுகளும் நடைமுறையில் உள்ள நிலையில், இந்தியர்கள் வேலைவாய்ப்புகளுக்காக மற்றவர்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது.

போட்டி என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், இந்தியர்கள் இனத்தின் அடிப்படையில் பாகுபாட்டுக்கு உள்ளாகும்போது, அந்தப் போட்டியை நியாயமானது என்று கூற முடியாது.

நகர்ப்புறப் பொருளாதாரத்தில் தாமதமாக நுழைந்தது

இந்தியர்கள் நகர்ப்புறப் பொருளாதாரத்தில் தாமதமாக நுழைந்ததும் ஒரு முக்கிய காரணமாகும். அதற்குள் சிறந்த வேலைவாய்ப்புகளும் பொருளாதார வாய்ப்புகளும் பலவற்றை மற்றவர்கள் கைப்பற்றிவிட்டனர்.

நாட்டில் வெளிப்படையான மற்றும் மறைமுகமான இனப் பாகுபாடு திறம்பட எதிர்கொள்ளப்பட்டு, சட்டரீதியாகத் தடை செய்யப்படும் வரை, இந்தியர்கள் அரசுப் பணியிலும் தனியார் துறையிலும் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் முன்னேறுவதிலும் தொடர்ந்து கடுமையான தடைகளை எதிர்கொள்வார்கள்.

அரசுப் பணியிலும் தனியார் துறையிலும் சில இந்தியர்கள் வெற்றி பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டி, இனப் பாகுபாட்டின் பாதிப்புகளை மறுக்கவோ குறைத்து மதிப்பிடவோ முடியாது. ஒரு சில தனிநபர்களின் சாதனைகளை வைத்து, கட்டமைப்பு ரீதியான பாகுபாடு இல்லை என்று கூற முடியாது.

பல இந்தியர்கள் அரசுப் பணியிலும் தனியார் துறையிலும் எதிர்கொள்ளும் சாதகமற்ற சூழ்நிலையின் பின்னணியில், சில இந்திய இளைஞர்கள் குற்ற உலகத்தையும் இரகசியக் கும்பல்களையும் பணம் சம்பாதிப்பதற்கும், சமூக அந்தஸ்தைப் பெறுவதற்கும், தங்களுக்கு ஓர் அடையாளத்தையும் சேர்ந்திருக்கும் உணர்வையும் ஏற்படுத்திக் கொள்வதற்கும் எளிதான வழியாகக் கருதக்கூடும்.

குற்றச்செயல்கள் சமூக வெற்றிடத்தில் உருவாகவில்லை

இது குற்றச்செயல்களை நியாயப்படுத்துவதற்காகக் கூறப்படவில்லை. குற்றச்செயல்கள் சமூக வெற்றிடத்தில் உருவாகவில்லை என்பதை உணர்ந்து கொள்வதற்காகவே கூறப்படுகிறது.

அறையில் இருக்கும் மிகப் பெரிய யானை

இனப் பாகுபாடும், இந்தியர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ஓரங்கட்டப்படுதலும் இந்திய இளைஞர்களையும் அவர்களது பெற்றோர்களையும் குண்டர் கலாசாரத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டுவது, அறையில் இருக்கும் மிகப் பெரிய யானையைப் பார்க்க மறுப்பதாகும்.

அந்த யானை வேறொன்றுமல்ல — இனப் பாகுபாடும், இந்தியர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ஓரங்கட்டப்படுதலும் ஆகும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும், காவல்துறை குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று அரசாங்கம் வெறுமனே கூறிவிட முடியாது.

இத்தகைய நடவடிக்கைகள் பிரச்சினையின் அறிகுறிகளைக் கையாளக்கூடும். ஆனால், சில இளைஞர்களை குற்ற வலையமைப்புகளால் ஈர்க்கப்படக்கூடியவர்களாக மாற்றும் அடிப்படைச் சூழ்நிலைகளை அவை தீர்க்காது.

இந்திய இளைஞர்களிடையே குண்டர் கலாசாரத்தைக் குறைப்பதில் அரசாங்கம் உண்மையிலேயே தீவிரமாக இருந்தால், அது காவல்துறை நடவடிக்கைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும்.

கட்டமைப்பு ரீதியான சமத்துவமின்மை

அவர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் கட்டமைப்பு ரீதியான சமத்துவமின்மைகளை அரசாங்கம் கையாள வேண்டும். அரசுத் துறையில் சமமற்ற வேலைவாய்ப்பு, தனியார் துறையில் நிலவும் பாகுபாடு, குறைந்த பொருளாதார வாய்ப்புகள் மற்றும் இந்திய சமூகத்தின் சில பிரிவுகள் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவது ஆகியவை இதில் அடங்கும்.

பல தலைமுறைகளாக இந்தியர்களின் இரத்தம், வியர்வை மற்றும் உழைப்பால் இந்த நாடு அளவிட முடியாத அளவுக்கு பயனடைந்துள்ளது. ஆனால், சமமான வாய்ப்புகளையும் உரிய அங்கீகாரத்தையும் பெறுவதற்குப் பதிலாக, இன்னும் பல இந்தியர்கள் இனப் பாகுபாட்டையும் ஓரங்கட்டப்படுதலையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, பிரச்சினை இந்திய இளைஞர்களும் குற்றச்செயல்களும் மட்டுமல்ல.

சமமாகப் பங்கேற்பதற்கு இன்னும் தடைகளை எதிர்கொள்கின்றனர்

சுதந்திரம் பெற்றும் பல தசாப்தங்களாக வளர்ச்சியடைந்தும் வந்துள்ள இந்த நாட்டில், இந்திய சமூகத்தின் ஒரு பகுதியினர் ஏன் பொருளாதார, சமூக மற்றும் நிறுவன ரீதியான வாழ்க்கையில் சமமாகப் பங்கேற்பதற்கு இன்னும் தடைகளை எதிர்கொள்கின்றனர் என்பதே மிகப் பெரிய கேள்வியாகும்.

இந்தக் கேள்வியை நேர்மையாக எதிர்கொள்ளும் வரை, இந்திய இளைஞர்களையோ, அவர்களின் பெற்றோர்களையோ அல்லது காவல்துறையையோ குற்றம் சாட்டுவது பிரச்சினையின் அறிகுறிகளை மட்டுமே கையாளும்; உண்மையான நோய் தொடர்ந்து சிகிச்சையின்றியே இருக்கும்.

 



Read More

Previous Post

Property Rights | தந்தை உயில் எழுதாமல் இறந்தால் திருமணமான மகளுக்கு சொத்தில் பங்கு கிடைக்குமா? சட்டம் சொல்வது என்ன?

Next Post

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

Next Post
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin