Last Updated:
இந்திய டி-20 கிரிக்கெட் அணியை வழிநடத்துவது சவாலான பணி என்ற போதிலும் தனது குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இந்திய டி-20 கிரிக்கெட் அணியை வழிநடத்துவது சவாலான பணி என்ற போதிலும் தனது குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தனது சிறுவயது கிரிக்கெட் பயணத்தை பகிர்ந்துகொண்டார். இந்திய அணியை வழிநடத்துவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
எனினும், தான் முன்பிருந்த அதே நபராகத்தான் இருப்பேன் என்றும் வேறு யாராகவும் மாறவோ அல்லது யாருடைய நிழலிலும் இருக்கவோ மாட்டேன் என்றும் கூறினார். மும்பையில் பிறந்து வளர்ந்ததால் சவால்களை எதிர்கொள்வது தனக்குப் பழகிவிட்டதாகவும் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.
Jun 08, 2026 10:32 AM IST


