Last Updated:
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற “The Future of Environment and Climate Dynamics” என்ற சர்வதேச மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதிக்கும் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்தார்.
கார்பன் உமிழ்வு விவகாரத்தில் வளரும் நாடுகள் மீது தவறாகப் பழி சுமத்தப்படுவதாக கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே இருப்பதாக விளக்கமளித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற ‘சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்கவியலின் எதிர்காலம்’ (The Future of Environment and Climate Dynamics) என்ற சர்வதேச மாநாடு தொடங்கியது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்பாடு செய்திருக்கும் 2 நாட்கள் நடைபெறும் இந்தச் சுற்றுச் சூழல் மாநாட்டில் 17 நாடுகள் பங்கேற்கின்றன.
மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதிக்கும் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், கடந்த 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் இந்தியா அபரிமிதமாக முன்னேறியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தர்.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே எட்டிச் சாதனை படைத்த ஒரே ஜி20 நாடு இந்தியா மட்டுமே என்றும் அவர் கூறினார்.
#WATCH | Delhi: At the International Conference on “The Future of Environment and Climate Dynamics”, Prime Minister Narendra Modi says, “Alongside solar energy, India has achieved significant milestones in other clean energy sectors as well. Over the past 12 years, the country’s… pic.twitter.com/v45zuFeRvT
— ANI (@ANI) September 19, 2026
கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 950 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


