Last Updated:
ஆற்றில் அடிக்கும் டைவ்விற்கு, போட்டி வைத்து பரிசுகளை வழங்கி வருகிறது இந்த நாடு. இதற்கு பின்னணியில் ஒரு வரலாற்று காரணமும் உள்ளது. அது என்ன தெரியுமா?
கிராமங்களில் பொழுதுபோக்காக இளைஞர்களும் சிறுவர்களும் ஆற்றில் அடிக்கும் டைவ்விற்கு, போட்டி வைத்து பரிசுகளை வழங்கி வருகிறது போஸ்னியா.
ஐரோப்பிய நாடான போஸ்னியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மோஸ்டார் பாலம், சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டோமான் பேரரசின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கல் பாலமாகும். 1992 முதல் 1995 வரையான போஸ்னிய போரின் போது போஸ்னிய குரோஷியப் படைகளால் இந்த வரலாற்றுச் சின்னம் முழுமையாக அழிக்கப்பட்டது. போருக்குப் பிறகு, சர்வதேச சமூகத்தின் நிதியுதவியுடன் 30 மீட்டர் உயரத்தில் பழைய பாலம் போன்றே மிக துல்லியமாக சீரமைக்கப்பட்ட பாலம், 2004-இல் மீண்டும் திறக்கப்பட்டது.
Thirty-four divers from across the Western Balkans gathered in Mostar, Bosnia, for the 460th edition of the city’s traditional bridge diving competition pic.twitter.com/svbYOKrXpD
— Reuters (@Reuters) July 27, 2026
இந்த மறுசீரமைப்பைக் கொண்டாடும் வகையிலேயே ஆண்டுதோறும் டைவிங் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். இப்போட்டியில் கால்களை முதலில் செலுத்தி குதிக்கும் போட்டியில் இகோர் காசிக் என்ற நபர், முதலிடம் பிடித்துத் தனது 11-ஆவது வெற்றியைப் பதிவு செய்தார். தலையை முதலில் செலுத்தி குதிக்கும் போட்டியில் எவால்ட் கர்னிக் என்பவர் வெற்றி பெற்றார்.


