Last Updated:
எங்கிருந்தாலும் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் எங்கிருந்தபடியும் ஆன்லைன் மூலமாகப் பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டத்தை வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
புதிய முறையால் இரவிலும் பத்திரப்பதிவு செய்யலாம் என்பதால் 30 சதவீத மக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வருவது குறையும் என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
சென்னை நந்தனத்தில் ஜூன் மாதத்திற்கான பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், ‘Anyway Registration’ என்ற புதிய சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகக் கூறினார்.
முதற்கட்டமாக, அடுக்குமாடி குடியிருப்புகளைப் பதிவு செய்வது போன்ற ஒருசில குறிப்பிட்ட சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக விவரித்தார்.
ஆன்லைன் மூலமாகப் பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டம்… ஆக.17-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்


