Last Updated:
ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவழித்து சாகுபடி செய்திருந்தாலும், போதிய நீர்ப்பாசனம் இல்லாததால் விளைச்சல் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மருங்குளம், திருக்கானூர்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு பூக்களுக்கு அதிக தேவை நிலவி வருவதால், செண்டுமல்லி வழக்கத்தை விட அதிக விலைக்கு விற்பனையாகி, ஒரு கிலோ ரூ.70 வரை விலை கிடைத்து வருகிறது.
இருப்பினும், மும்முனை மின்சாரம் முறையாக கிடைக்காததால் பயிர்களுக்கு தேவையான அளவு நீர்ப்பாசனம் செய்ய முடியாமல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவழித்து சாகுபடி செய்திருந்தாலும், போதிய நீர்ப்பாசனம் இல்லாததால் விளைச்சல் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
மேலும், தினமும் 8 மணி நேரம் மட்டுமே வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தை குறைந்தது 16 மணி நேரமாக உயர்த்தி வழங்கினால் மட்டுமே பூ சாகுபடியில் லாபம் பார்க்க முடியும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக மும்முனை மின்சார விநியோக நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Thanjavur,Thanjavur,Tamil Nadu

