ஈரான் மீதான அமெரிக்காவின் தற்போதைய அழுத்தங்களை அந்த நாடு தாங்கி நிற்பதற்குக் காரணம், அங்குள்ள ஆட்சியாளர்கள் தமது மக்களின் துயரங்கள் குறித்துக் கவலைப்படாததே ஆகும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணு ஆயுதக் கனவைக் கைவிடச் செய்யவும், அவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வரவும் எது உதவும் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ரூபியோ, ஈரானின் பொருளாதாரம் தற்போது மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் பாதிப்புகள்
ஈரானால் இந்த அழுத்தங்களைத் தாங்க முடிகிறது என்பதை விட, தமது நாட்டு மக்கள் படும் துன்பங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படாமல் இருப்பதே உண்மை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Image Credit: TIME
அழுத்தங்களைத் தாங்குவதற்கும், மக்களின் பாதிப்புகளைப் பொருட்படுத்தாமல் இருப்பதற்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாக ரூபியோ கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அழுத்தங்கள்
ஈரான் அரசாங்கத்தில் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் நலனில் ஓரளவு அக்கறை காட்டினாலும், அந்நாட்டின் மதகுருமார்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) போன்ற பிரிவினர் இத்தகைய பாதிப்புகளால் பாதிக்கப்படுவதில்லை என்றும், அவர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

எனினும், எத்தகைய சூழலிலும் அமெரிக்காவின் அழுத்தங்கள் தொடர்ந்து கொடுக்கப்படும் என்பதையும் அவர் தனது கருத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

