Last Updated:
பராகுவே வீரரொருவர் ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் நின்றிருந்த பகுதிக்குள் பாய்ந்ததால் அதிர்ச்சி.
அர்ஜென்டினாவின் கோர்டோபாவில் (Córdoba) நடந்த கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.
ஞாயிறன்று மினா கிளாவெரோ (Mina Clavero) என்ற இடத்தில் கரடுமுரடான பாதையில் கார்களை இயக்கும் தென்அமெரிக்க அளவிலான பந்தயம் நடைபெற்றது. அப்போது பராகுவே நாட்டை சேர்ந்த வீரர் டிடியர் அரியாஸ் (Didier Arias) ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் நின்றிருந்த பகுதிக்குள் பாய்ந்தது.
இதில், அதே பகுதியை சேர்ந்த பிரையன் ஜாரேட் (Brahian Zárate González) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த ஒரு பெண்ணும், அவரது மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தை தொடர்ந்து, போட்டியை சர்வதேச வாகன கூட்டமைப்பு உடனடியாக நிறுத்தியதுடன், எஞ்சிய போட்டிகளையும் ரத்து செய்தது.


