Last Updated:
சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதையும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு நிவாரணமும் உதவியும் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திட்டங்களைச் செயல்படுத்துவதில் இரட்டை நிலை குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக, சாதி மறுப்பு கலப்புத் திருமணங்களுக்கு ஆதரவு அளிக்கும் டாக்டர் அம்பேத்கர் திட்டம், வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பட்டியல் வகுப்பினர்/பழங்குடியினருக்கான டாக்டர் அம்பேத்கர் தேசிய நிவாரணத் திட்டம் ஆகியவை, சமூக நீதி – அதிகாரமளித்தல் துறையின் மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்துடன் 2023 மார்ச் 31 முதல் இணைக்கப்பட்டுள்ளதாக அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.


