Last Updated:
ஒவ்வொருவரும் பாதுகாப்பாக உணரும் போதுதான் அமைதி உண்டாகிறது என்று போப் லியோ பேசியுள்ளார்.
செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களின் விருப்பங்கள் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக போப் லியோ, அமெரிக்க அதிபர் டிரம்பை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா போர் தொடர்பாக டிரம்ப் மற்றும் போப் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் தீவிரப்படுத்தி வந்த போது, போர் தொடுப்பவர்களின் பிரார்த்தனைகளை கடவுள் கேட்க மாட்டார், அவற்றை நிராகரிப்பார் என்று போப் லியோ கூறியிருந்தார். மேலும் டிரம்ப்பின் நிர்வாகத்தை பார்த்து தனக்கு எந்த அச்சமும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
போப் மற்றும் டிரம்ப்
அதேநேரத்தில் போப் லியோ, பலவீனமானவர் என டிரம்ப் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் கேமரூன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் லியோ பேசுகையில், சக்திவாய்ந்தவர்களின் தன்னிச்சையான விருப்பங்களிலிருந்து சமூகத்தை சட்டத்தின் ஆட்சி பாதுகாக்க வேண்டும் என்றார். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக உணரும் போதுதான் அமைதி உண்டாகிறது என்றும் அவர் பேசினார்.


