இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடல்வழி முற்றுகையை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தங்களது கச்சா எண்ணெய் டாங்கர்கள் மற்றும் பிற வணிகக் கப்பல்கள் உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தை மீண்டும் முழு வீச்சில் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


