• Login
Monday, June 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்து! போர் முடிவுக்கு வருமா? – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
June 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்து! போர் முடிவுக்கு வருமா? – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்து! போர் முடிவுக்கு வருமா?

அமெரிக்க பொருளாதாரத் தடைகள் மற்றும் துறைமுக முற்றுகைகள் காரணமாக கடுமையான நெருக்கடியை எதிர்கொண்ட ஈரானின் பொருளாதாரத்திற்கு இந்த ஒப்பந்தம் புதிய உயிரூட்டலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால பதற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளுக்குமிடையிலான சமாதான உடன்படிக்கை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்திடப்படவுள்ளதாக சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை ஈரானின் இராணுவ மற்றும் அரசியல் நிலைப்பாட்டிற்கு கிடைத்த முக்கிய வெற்றியாகக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல மாதங்களாக நீடித்து வந்த அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தம் தொடர்பான அடிப்படை இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களை தணித்து, அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் மத்தியஸ்த நாடாக செயல்பட்ட பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணை மீது விதித்திருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதும், அதேபோல் அமெரிக்கா ஈரானின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் வர்த்தகப் பாதைகளுக்கு எதிராக மேற்கொண்டிருந்த முற்றுகை நடவடிக்கைகள் வாபஸ் பெறப்படுவதும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் விளைவாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், சர்வதேச சந்தைகளில் எரிசக்தி விலைகளும் கடுமையாக உயர்ந்தன. இதனால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் அமெரிக்க நிர்வாகத்தின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நீரிணை மீண்டும் திறக்கப்படுவது உலக வர்த்தகத்திற்கும் எரிசக்தி சந்தைகளுக்கும் நிவாரணம் அளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

மறுபுறம், அமெரிக்க பொருளாதாரத் தடைகள் மற்றும் துறைமுக முற்றுகைகள் காரணமாக கடுமையான நெருக்கடியை எதிர்கொண்ட ஈரானின் பொருளாதாரத்திற்கு இந்த ஒப்பந்தம் புதிய உயிரூட்டலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு முதலீடுகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் சீரடையும் வாய்ப்புகள் உருவாகலாம் எனவும் மதிப்பிடப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அமைதி ஒப்பந்தம் லெபனான் உள்ளிட்ட பிராந்தியங்களில் நடைபெற்று வரும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதற்கான அழைப்பை உள்ளடக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கியதாகக் கூறப்படும் மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான இராணுவ பதற்ற நிலை விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை சர்வதேச அரங்கில் உருவாகியுள்ளது. எனினும், ஒப்பந்தத்தின் இறுதி விவரங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வரை உலக நாடுகள் கவனத்துடன் காத்திருக்கின்றன.

Read More

Previous Post

இந்தியாவில் 100% எத்தனால் எரிபொருளை பயன்படுத்த ஒப்புதல் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஜோகூரில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் வீட்டுப் பணியாளர்களுக்கு இந்தோனேசியத் தூதரகம் அடைக்கலம் அளிக்கிறது

Next Post
ஜோகூரில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் வீட்டுப் பணியாளர்களுக்கு இந்தோனேசியத் தூதரகம் அடைக்கலம் அளிக்கிறது

ஜோகூரில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் வீட்டுப் பணியாளர்களுக்கு இந்தோனேசியத் தூதரகம் அடைக்கலம் அளிக்கிறது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin