அப்படியிருந்தும், அவர்கள் அதைக் கற்பிக்கப்போகிறார்கள் என்றால், கொலம்பஸுக்குப் பிறகு வந்தவர்கள் அங்கிருந்த பழங்குடியினத்தவர்களை எவ்வாறு அழித்தார்கள், அவர்களை எவ்வாறு மதமாற்றம் செய்தார்கள் என்பதையும் கற்பிக்க வேண்டும். மேலும், இந்திய மாலுமி ஒருவர் 8-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்குச் சென்று சான் டியாகோவில் பல கோயில்களைக் கட்டினார். நம் முன்னோர்கள் அங்கு சென்றபோது மாயா நாகரிகத்தோடு அவர்களின் கலாசாரத்தை வளர்க்க உதவினர்.

இந்தியாவின் இந்த சிந்தனை முறை மற்றும் தத்துவத்தை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். எதைக் கற்பித்தாலும் அதைச் சரியாகக் கற்பிக்க வேண்டும். எனவே, அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல, நம் முன்னோர்கள்தான். அதேபோல, இந்திய வர்த்தகரான சாந்தனின் கப்பல் தன்னுடைய கப்பலைவிட 2 முதல் 4 மடங்கு பெரியது என்று வாஸ்கோடகாமா எழுதியிருக்கிறார். சாந்தனைப் பின்தொடர்ந்துதான் வாஸ்கோடகாமா இந்தியா வந்தார். ஆனால், இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா என்று வரலாற்றாசிரியர்கள் இந்திய மாணவர்களுக்குத் தவறாகக் கற்பித்தனர்.” என்று கூறினார்.

