Last Updated:
அமிர்தசரஸ் தாகூர் துவாரா கோயில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வெடிகுண்டுகளை வீசினர். பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் கோயில் வளாகத்துக்குள் பைக்கில் வந்த 2 பேர் வெடிகுண்டுகளை வீசிய நிலையில், இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அமிர்தசரஸின் கண்ட்வாலா பகுதியில் தாகூர் துவாரா கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்து காத்திருந்த 2 பேர் திடீரென கோயில் மீது வெடிகுண்டுகளை வீசினர்.
இரவு நேரத்தில் சுமார் 1 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலில் கோயில் வளாகமும், அதைச் சுற்றி இருந்த கட்டடங்களும் சேதமடைந்தன. இதுகுறித்து கோயில் நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குண்டு வீசியவர்களை தேடி வருகின்றனர்.
பஞ்சாப்பில் இதேபோல வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து கடந்த சில மாதங்களில் மட்டும் 13 தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 15, 2025 5:25 PM IST


