அப்பார்ட்மென்ட் வீட்டில் இருக்கீங்களா.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. 50000 ரூபாய் லாபம்!
தமிழ்நாடு மின்சார துறை Vision 2031 என்ற புதிய கனவு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களையும், இலக்குகளையும் அடைய திட்டமிட்டப்பட்டு உள்ளது விஜய் தலைமையிலான அரசு.
Vision 2031 திட்டத்தின் முக்கிய இலக்கா 2031-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் மொத்த மின்சார பயன்பாட்டில் சுமார் 50% பங்கை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக மாற்ற வேண்டும் என்ன இலக்கு நிர்ணயம் செய்துள்ளார் அமைச்சர் நிர்மல் குமார். இந்தத் திட்டத்தின் கீழ் சாமானிய மக்களுக்கு பயன்படும் வகையில் முக் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் முதலாவது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான (EV) சார்ஜிங் கட்டமைப்பை அமைப்பது. தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பல கோடி அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கும் நிலையில், மக்களின் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அப்பார்ட்மெண்ட்டில் EV சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் Resident Welfare Associations (RWAs)-க்கு தமிழ்நாடு அரசு மொத்த செலவில் 50 சதவீத தொகையை மானியமாக வழங்க உள்ளது.
இந்த மானியத்தை ஒரு அப்பார்ட்மென்ட் வளாகத்திற்கு அதிகபட்சமாக ரூ.50,000 என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான திட்டத்திற்காக குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு மட்டும் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1000 அப்பார்மென்ட்கள் பலன் பெறும்.
சார்ஜிங் ஸ்டேஷன் அந்த அப்பார்ட்மென்ட் வீடுகளில் இருக்கும் உரிமையாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம், இல்லையெனில் கூடுதல் வருமானம் பெறுவதற்காக வெளி வாகனங்களுக்கும் சார்ஜிங் செய்ய அனுமதி வழங்கலாம். இத்திட்டம் அதிகளவிலான எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டு இருக்கும் அப்பார்ட்மெண்ட் வீடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் Vision 2031 திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 2031-க்குள் மொத்தம் 20,000 EV சார்ஜிங் நிலையங்களை அமைப்பது அரசின் இலக்காக உள்ளது. இந்த 20,000 சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் திட்டம் தனியார் மற்றும் பொதுத்துறை கூட்டணியில் PPP முறையில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் மாத தரவுகள் படி இந்தியாவில் சுமார் 5.5 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதோடி 2,425 சார்ஜிங் ஸ்டேஷன் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் அடுத்து 5-6 வருடத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் எண்ணிக்கையை சுமார் 10 மடங்கு உயர்த்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஏற்கனவே இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில் இத்தகைய மேம்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்பை உருவாக்குவது மூலம் EV இந்திய ஆட்டோமொபைல் துறையில் முக்கிய ஆதிக்க நிலையை கட்டாயம் அடையும், குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் நடக்கும்.
சமீபத்தில் மத்திய அரசின் PM E-DRIVE திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 528 இடத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் வைப்பதற்கான ஆய்வை துவங்கியுள்ளது. Vision 2031 கனவு திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 50000 புதிய விவசாய மின்சார இணைப்புகள் கொடுக்கவும் திட்டமிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் பதிவு செய்து காதித்திருக்கும் லட்ச கணக்கான விவசாயிங்கள் பலன் அடைய உள்ளனர்.

