ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அணுசக்தி நிபுணர்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறைக் கொள்கைக்கான தலைவர் காஜா கல்லாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் அணுசக்தி நிபுணர்கள் கலந்துகொள்ளாவிட்டால், ஈரான் விடுக்கும் அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் “மிகவும் அபாயகரமானதாக” மாறக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம்
அத்தோடு, 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தின் போது எட்டப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை விட பலவீனமான ஒன்றாகத் தற்போதைய புதிய ஒப்பந்தங்கள் அமைந்துவிடக்கூடும் என்ற அச்சத்தையும் கல்லாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
Image Credit: Le Monde diplomatique
2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணுசக்தி செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், சர்வதேச ஆய்வாளர்களைத் தனது நாட்டிற்குள் அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டது.
அதற்கு ஈடாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.
ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியிருந்தார்.
ஈரானின் அச்சுறுத்தல்
இந்த நிலையில், தற்போதைய பேச்சுவார்த்தைகள் வெறும் அணுசக்தி திட்டத்தைப் பற்றி மட்டும் அமைந்தால் போதாது என்றும், அதில் அணுசக்தி நிபுணர்கள் பங்குபெற வேண்டியது அவசியம் என்றும் கல்லாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Image Credit: Al Arabiya
மேலும், ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள், பிற ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு மற்றும் ஐரோப்பாவில் ஈரான் மேற்கொண்டு வரும் சைபர் தாக்குதல் நடவடிக்கைகள் போன்றவை குறித்தும் பேச்சுவார்த்தைகளில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால், ஈரான் முன்பை விட அதிக அச்சுறுத்தலை உருவாக்கும் நாடாக மாறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

