Last Updated:
Karate Championship|தஞ்சை அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டி.
தஞ்சையில் சேம்பியன்ஸ் Shito-ryu கராத்தே டூ இந்தியா சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
“சேலஞ்சர்ஸ் கப்” என்ற பெயரில் 2 -ம் ஆண்டாக தஞ்சை அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தஞ்சை, திருச்சி,மதுரை, விழுப்புரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 5 வயது முதல் 30 வயது வரையிலான 150 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு கராத்தே செய்து அசத்தினர். போட்டியை கவுன்சிலர் அன்னப்பிரகாஷ் மற்றும் சேம்பியன் Shito-ryu செக்ரட்டரி மற்றும் ஒருங்கிணைப்பாளர் முகமது அனஸ் உள்ளிட்ட பலர் துவக்கி வைத்தனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
இது குறித்து போட்டியில் பங்கேற்ற சிறுவர்கள் கூறுகையில், “என் பேரு சித்தார்த், நான் மதுரையிலிருந்து வர்றேன். எனக்கு 8 வயசு ஆகுது. நாலு வயசுல இருந்து கராத்தே வீடியோஸ் பார்ப்பேன். வீட்டிலேயே என் பாப்பா கூட நான் கராத்தே செஞ்சு ஜாலியா விளையாண்டுட்டு இருப்போம். அப்புறம் தான் எங்க அப்பா என்னைய அஞ்சு வயசுல கராத்தேல சேர்த்து விட்டாங்க. இப்ப எனக்கு எட்டு வயசு ஆகுது. நான் நிறைய ஊர்ல கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்கி இருக்கேன். இந்த ஸ்டேட் மேட்ச்லயும் கலந்துக்கிட்டு ஃபர்ஸ்ட் பிரைஸ் எடுத்து இருக்கேன். நான் இன்னும் அடுத்து நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு கராத்தே செய்வேன்.” என்று கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
February 24, 2025 6:39 PM IST

