மத்திய பொதுத்துறை நிறுவனமான பிரைத்வைட் 500 ரயில் பெட்டிகளை வழங்க ரூ.180 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் ரயில்வேயிடமிருந்து பெற்றுள்ளது என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரைத்வைட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான யதீஷ் குமார் தெரிவித்ததாவது:
இந்த மாதம் ரூ.180 கோடி மதிப்பிலான 500 வேகன்களுக்கான ஆர்டரை நாங்கள் பெற்றுள்ளோம். அதே வேளையில் 2018ல் வேகன்கள் வணிகத்தில் 95 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அது 55 சதவீதமாக குறைந்துள்ளது. அதே வேளையில் டிசம்பர் 2023ல் ரூ.1,734 கோடியாக இருந்த மொத்த ஆர்டர் பைப்லைனை அதிகரிக்க நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.
சிவில் கட்டுமானம், பாலம் கிரேன்கள் கட்டுதல் அத்துடன் பராமரிப்பு நடவடிக்கைகள் சாத்தியமான நிலையில் கன்டெய்னர் உற்பத்தி, சோலார் பி.வி ஆலைகள் மற்றும் ரயில் நிலைய கட்டுமான ஒப்பந்தங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன என்றார் யதீஷ் குமார்.