[ad_1]
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, அமெரிக்கா சென்றிருந்த புதின், ட்ரம்ப் உடனான சந்திப்பு முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் ரஷ்யாவிற்கு கிளம்பிவிட்டார்.
ஆனால், சீனாவில் இப்போது புதின் மூன்று நாள்களாக இருக்கிறார்.
மேலும், சீனாவில் இந்திய பிரதமர் மோடி உடன் அதிக நட்புடன் இருந்தார் புதின். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான அமைதி பேச்சுவார்த்தைப் பற்றி இன்னமும் வாயைத் திறக்கவில்லை அவர்.

இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஒற்றுமையாக இருக்கிறதை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் மூன்று நாட்டு தலைவர்களும் வலுவாக தெரிவிக்கின்றனர்.
இதெல்லாம் நிச்சயம் ட்ரம்பிற்கு கடுப்பாகவே இருந்திருக்கும்.
போதாக் குறைக்கு, அமெரிக்காவின் பெயரை தனது உரையில் ஜின்பிங் குறிப்பிடவில்லை.
உலகமே ஒரு வழியில் போனால், கிம் ஜாங் உன் தனி வழியில் தான் செல்வார். அது உலகத்திற்கே தெரிந்த ஒன்று. அவர் இப்போது சீனாவில் உள்ளார்.
இந்தக் கோபங்களை எல்லாம் ட்ரம்ப் எப்படி பிரதிபலிப்பார் என்பதைப் பொறுத்து பார்க்கலாம்.