Last Updated:
பின்னர் இணைந்த தீபேந்திர சிங் மற்றும் ஆரிப் ஷேக் ஆகியோர் அரைச்சதம் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ஐக்கிய அமீரக அணியை நேபாளம் எளிதாக வென்றது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ஆம் தேதி இந்தியா, இலங்கை நாடுகளில் தொடங்க உள்ளது. இதனையொட்டி இதில் இடம் பெற்றுள்ள 20 அணிகள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங்கை தொடங்கியது.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ஹர்ஷித் கவுசிக் 35 ரன்களும், சொயப் கான் 38 ரன்களும் எடுத்தனர் . இதன்பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி நேபாள அணியினர் களம் இறங்கினர்.
தொடக்க வீரர்கள் குஷால் பர்டேல் மற்றும் ஆசிப் ஷேக் தலா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ரோஹித் பாடேல் 16 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் இணைந்த தீபேந்திர சிங் மற்றும் ஆரிப் ஷேக் ஆகியோர் அரைச்சதம் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். தீபேந்திர சிங் 31 பந்துகளில் 50 ரன்களும், ஆரிப் ஷேக் 37 பந்துகளில் 61 ரன்களும் எடுத்தனர்.
Feb 03, 2026 10:17 PM IST


