Last Updated:
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
குரூப் 1 பிரிவில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறதி சுற்றை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் அடுத்து அரையிறுதிக்கு செல்லும் அணியை தீர்மானிக்கும் போட்டியாக இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்கிற நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப் மற்றும் ராஸ்டன் சேஸ் களம் இறங்கினர். மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹோப் 33 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
12 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்து ஷிம்ரோன் ஹெட்மேயர் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து 14 ரன்களில் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் ரதர்போர்டு வெளியேறினார்.
பின்னர் இணைந்த ரோமன் பவல் – ஜேசன் ஹோல்டர் இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. பவெல் 34 ரன்களும், ஹோல்டர் 37 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்கள் குவித்தது.


