Last Updated:
திபேந்திர சிங் ஐரி வெறும் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்
டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து மற்றும் நேபாள அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில், நேபாள அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை தொடரில் 33 ஆவது லீக் ஆட்டமாக சி பிரிவில் மும்பை வான்கிடே மைதானத்தில் இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சி 27 ரன்களும் மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் 71 ரன்களும் எடுத்ததுடன் இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்தது. பிராண்டன் மெக்முல்லன் 25 ரன்கள் எடுத்து பங்களித்தார். நேபாள அணி தரப்பில் சோம்பால் காமி சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், நந்தன் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நேபாள அணிக்கு தொடக்க வீரர்கள் குஷால் புர்டெல் 43 ரன்களும் மற்றும் ஆசிப் ஷேக் 33 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். கேப்டன் ரோகித் பவுடல் 16 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதன்பின் இணைந்த திபேந்திர சிங் ஐரி மற்றும் குல்சன் ஜா ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
Feb 17, 2026 11:30 PM IST


