Last Updated:
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 209 ரன்கள் எடுத்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதிராக நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் 18 ஆவது மேட்ச்சாக இந்தியா மற்றும் நமீபியா அணிகள் மோதும் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கி அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 3 சிக்சருடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 21 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க, சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி தள்ளிய இஷான் கிஷன் 24 பந்துகளில் 5 சிக்சர் 6 பண்டரியுடன் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
வழக்கம் போல ஹர்திக் பாண்ட்யா சிக்சர் மழை பொழிந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். 28 பந்துகளை எதிர்கொண்ட பாண்ட்யா தலா 4 சிக்சர் பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்தார். சிவம் துபே 23 ரன்களில் வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நமீபியா களம் இறங்கினர்.
அனுபவம் இல்லாத நமீபிய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் வலுவான பந்து வீச்சுக்கு முன்னால் ரன்கள் எடுக்க திணறி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியில் தொடக்க வீரர்கள் லோரன் ஸ்டீன்காம்ப் 29 ரன்களும், ஜேன் ஃப்ரைலிங்க் 22 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் ஜெரார்ட் எராஸ்மஸ் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நமீபியா அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்து 93 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
Feb 12, 2026 11:23 PM IST


