Last Updated:
அரைச்சதம் கடந்த டாம் பேன்டன் 63 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். சாம் கரன் 28 ரன்கள் சேர்த்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி போராடி தோல்வியடைந்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 3 மணியளவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த ஸ்காட்லாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ரிச்சி பேரிங்டன் 49 ரன்களும், மைக்கேல் ஜோன்ஸ் 33 ரன்களும், டாம் ப்ரூஸ் 24 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், லியாம் டாவ்சன் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஸ்காட்லாந்து பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்தார்கள்.
தொடக்க வீரர்கள் பிலிப் சால்ட் 2 ரன்னிலும், ஜாஸ் பட்லர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்ததால் அணி தடுமாறத் தொடங்கியது. அடுத்து இணைந்த ஜேக்கப் பெத்தேல், டாம் பேன்டன் இணை விக்கெட்டை காப்பாற்றி பொறுப்புடன் விளையாடியது.
பெத்தேல் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹேரி ப்ரூக் 4 ரன்னில் வெளியேறினார். பின்னர் இணைந்த பேன்டன் – சாம் கரன் இணை அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது.


