• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது இந்திய அணி… 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 26, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது இந்திய அணி… 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 26, 2026 11:05 PM IST

அடுத்ததாக இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதும் போட்டி ஞாயிறு அன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

News18
News18

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஜிம்பாப்வேயை எதிர்கொண்ட இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜிம்பாப்வே பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்கள் குவித்தது.

கட்டாய வெற்றியை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 256 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 24 ரன்களும், அபிஷேக் சர்மா 55 ரன்களும் குவித்தனர்.

அடுத்து வந்த இஷான் கிஷன் 38 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 50 ரன்களும், திலக் வர்மா 44 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இந்திய அணியின் இன்னிங்ஸில் மட்டும் 17 சிக்சர்கள் பறந்தன. இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். தொடக்கம் முதலே கட்டுக் கோப்பாக இந்திய அணியின் பவுலர்கள் பந்து வீசியதால் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை.

தொடக்க வீரர்களில் தடிவனாஷ மருமனி 20 ரன்களும், கேப்டன் சிக்கந்தர் ராசா 31 ரன்களும் எடுத்தனர். ஒரு பக்கம் பேட்ஸ்மேன்கள் திணறினாலும் மறுமுனையில் தொடக்க வீரர் பிரையன் பென்னட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

59 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 97 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

First Published :

Feb 26, 2026 11:05 PM IST

Read More

Previous Post

“எனக்கும் பிரியங்கா காந்திக்கும் இடையே சண்டை…!” – வயநாட்டில் ராகுல் காந்தி சொன்ன விஷயம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மாநில அரசு ஒப்புதல் – Malaysiakini

Next Post

மாநில அரசு ஒப்புதல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin