காஞ்சிபுரத்திற்கு அடுத்து இருக்கக் கூடிய, விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் பெண் காவலராக டெல்லி ராணி இருந்து வருகிறார். இவர் இன்று பிற்பகல் பணிமுடிந்து தனது வீட்டுக்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருக்கும்போது, காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே உள்ள இந்தியன் வங்கி வாயிலில், அவரைப் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர், காவலர் டெல்லி ராணியை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது. வெட்டியது அவரது கணவர் மேகநாதன் எனவும் கூறப்படுகிறது.

&w=1200&resize=1200,675&ssl=1)