Last Updated:
Watermelon Sales |அடிக்கிற வெயிலுக்கு படுஜோராக விற்பனையாகும் தர்பூசணி பழங்கள்.
அடிக்கிற வெயிலுக்கு எங்க திரும்பி பார்த்தாலும் தர்பூசணி கடைகள் முளைத்துவிட்டது. வெயிலின் உஷ்ணத்தை தவிர்க்க பொதுமக்கள் குளிர்பானங்கள், பழங்களை சாப்பிட படையெடுத்து உள்ளனர். குறிப்பாக கோடை காலத்தில் அதிகமாக தர்பூசணி பழங்கள் விற்பனையாவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெயில் காலம் என்றாலே, தர்பூசணி பழத்தின் விற்பனை அதிகமாக இருக்கும். இப்பழத்தை சாப்பிடும் போது, உடலின் வெப்பம், எவ்வித மருந்து மாத்திரை இல்லாமல், இயற்கையான முறையில் குறைகிறது. அதனால் இப்பழத்தை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
கோடை காலம் எனப்படும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காலையில் பனிப்பொழிவும், அதன்பிறகு வெயில் தாக்கமும் இருந்தது. இந்நிலையில் காலை முதல் வெயிலும் இரவு நேரத்தில் சிறிது பனியும் காணப்படுகிறது.
இதற்கிடையில் கோடை வெயிலில் தாகம் தீர்க்கும் பழமாகவும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதுமான தர்பூசணி பழங்கள் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. சாலையோரங்களில் தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் பலரும் தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுகின்றனர். துண்டு, துண்டாக வெட்டப்பட்டு ஒரு தட்டில் ரூ.10-க்கும்,ரூ. 20- க்கும், முழு பழம் கிலோ ரூ.20-க்கும் விற்பனையாகிறது. எங்க விற்பனையாகும் பழங்கள் மரக்காணம், பாண்டிச்சேரி, வந்தவாசி, பவுஞ்சூர், திண்டிவனம் போன்ற பல பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்து வந்து, விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் பழ ஜூஸ் வகைகளும் விற்பனை அதிகரித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பழ ஜூஸ்களையும் பொதுமக்கள் குடித்து வருகின்றனர். தற்போது வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கிற நிலையில் கோடை காலத்தில் இதைவிட அதிகமான வெயில் தாக்கம் இருக்குமோ என கவலையில் உள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 18, 2025 5:02 PM IST

