கோலாலம்பூர்:
மலேசியா வட மலேசிய (UUM) மாணவி உயிரிழந்த பேருந்து விபத்துடன் தொடர்புடைய பேருந்து ஓட்டுநர், முன்னால் மற்றொரு பேருந்து நின்றதை கவனிக்கவில்லை என்று, போலீசார் வாக்குமூலம் பதிவு செய்யும்போது கூறியதாக குபாங் பாசு போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் ரட்ஸி அப்துல் ரஹிம் கூறினார்.
சிந்தோக்கில் உள்ள ஜாலான் பெர்சியாரான் பெர்டானா பேருந்து நிறுத்தத்திற்கு முன் இந்த விபத்து நிகழ்ந்தது.


இந்த விபத்தில் வட மலேசிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார். மேலும் எதிர் திசையில் பேருந்தை ஓட்டி வந்த 37 வயது நபர் நேற்று கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 32 வயது பேருந்து ஓட்டுநர் நேற்று மதியம் சுமார் 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
இவ்விபத்தில் தொடர்புடைய இரண்டு பேருந்து ஓட்டுநர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதன்போது, “முன்னால் வந்த பேருந்து நின்றதை ஓட்டுநர் உணரவில்லை என்று ஒப்புக்கொண்டார் என்றும், விசாரணை முடிந்ததும், விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞரிடம் அனுப்பப்படும்,” என்றும் அவர் மேற்கோள் காட்டினார்.
இரு ஓட்டுநர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டது என்று அவர் சொன்னார்.


