அரேபிய கடலில் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நோக்கி பறந்து கொண்டிருந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷாஹெட்-139 என்ற குறித்த ஆளில்லா விமானம் கப்பலை நெருங்கும் போது அமெரிக்க F-35 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிப்பு
ஆபிரகாம் லிங்கனின் F-35C போர் விமானம், தற்காப்புக்காகவும், விமானம் தாங்கிக் கப்பலையும் அதில் இருந்த பணியாளர்களையும் பாதுகாக்கவும் ஈரானிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது” என்று அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கடற்படை கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது எந்த அமெரிக்க சேவை உறுப்பினர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும் எந்த அமெரிக்க உபகரணங்களும் சேதமடையவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய இராஜதந்திரிகள் முயன்று வரும் சூழ்நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை மத்தியகிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

