இந்தசூழலில்தான் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து செய்தி முகமை ஒன்றிடம் பேசிய பெயர்சொல்ல விரும்பாத அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர், “சி-17 விமானம் ஒன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றுள்ளது. அதில் 205 பேர் இருக்கிறார்கள்.”என தெரிவித்திருக்கிறார். மொத்தமாக அந்த நாட்டில் 18,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியிருப்பதாக அந்தநாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்ரம்ப், “வரலாற்றில் முதல் முறையாக, நாங்கள் சட்டவிரோத வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து ராணுவ விமானங்களில் ஏற்றி, அவர்கள் வந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புகிறோம். இதற்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த விஷயத்தில் மோடி சரியானதைச் செய்வார்” என தெரிவித்திருந்தார்.
முன்னதாக 2023-24 காலகட்டத்தில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை 1,100-க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாடு கடத்தியது. இப்படி 495 விமானங்கள் மூலம் 1,60,000 நபர்களை இந்தியா உள்பட 145 நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஏன் இந்தியர்கள் குடியேறியிருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு பதிலளித்த விவரப்புள்ளிகள், “அமெரிக்காவில் மிகக் குறைந்த தனிநபர் வருமானம் 48,110 டாலர் ஆகும். இதுவே இந்தியாவின் நிகர தேசிய வருமானம் சுமார் 1,161 டாலர். அதிலும் பீகார் மிகக் குறைந்த தனிநபர் வருமானத்தைக் கொண்டுள்ளது. இங்கு தனிநபர் வருமானம் 708 டாலராக இருக்கிறது. எனவேதான் தங்களின் தங்கள் வாழ்க்கை மேம்படுத்த இந்தியர்கள் அங்கு தங்குகிறார்கள். மேலும் பல இந்தியர்களுக்கு விசாக்கள் அல்லது கிரீன் கார்டுகளைப் பெறுவதில் கட்டுப்பாடுகளையும் நீண்ட தாமதங்களையும் எதிர்கொள்கின்றனர்.