மோடியின் அமெரிக்க பயணத்தின் போது ட்ரம்ப் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த்தைத்தை ஏற்படுத்துவதற்கான நோக்கம் இருப்பதாக அறிவித்தார். ஆனால் இரண்டு நாடுகளும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க முடியவில்லை.
இதுவரை கட்டணங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக இரண்டு நாட்டு அதிகாரிகளும் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிடுகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிப்பதன்படி, ட்ரம்ப் ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டுவரும் கட்டணங்கள் தற்காலிகமானதாகவே இருக்குமென்றும், வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு மாற்றம் ஏற்படும் என்றும் இந்திய அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.