Last Updated:
அமெரிக்காவில் இருந்து 487 இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தியர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தினார்.
சட்டவிரோதமாக குடியேறியதாக மேலும் 487 இந்தியர்களை அமெரிக்கா வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என அந்நாட்டு குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறையிடம் வலியுறுத்தி வருவதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்பாக நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் கடைபிடிப்பது குறித்து அமெரிக்கா குடியேற்றத் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், நாடு கடத்தப்படும் இந்தியர்களை தவறாக நடத்த வேண்டாம் என அமெரிக்காவை வலியுறுத்தி வருவதாக கூறினார்.
வரும் காலங்களில் இந்தியர்கள் உரிய மரியாதையோடு நடத்தப்படுவார்கள் என்றும், சட்டவிரோத குடியேற்றங்களுக்கு துணை போகும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
February 08, 2025 10:32 AM IST
US illegal immigration: அடுத்த ஷாக்… மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா – மத்திய அரசு தகவல்


