Last Updated:
யூபிஎஸ்சி 933 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிட்டது. மே 24 முதல் நிலைத் தேர்வு, பிப்ரவரி 24 விண்ணப்ப கடைசி நாள். சென்னை உள்ளிட்ட நகரங்களில் தேர்வு நடைபெறும்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 933 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்திய ஆட்சிப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட 23 பிரிவுகளில் சுமார் 933 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு வரும் மே 24 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று யூபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
முதல் நிலைத் தேர்வு, Objective Type வினாக்களைக் கொண்டது என்றும் இதில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது. முதன்மைத் தேர்வை பெறுத்தவரை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 24 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் யூபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் முதற்கட்டத் தேர்வும் சென்னையில் முதன்மை தேர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் விண்ணப்பிப்பவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்றும் யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.


