Last Updated:
விலையுயர்ந்த மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2017-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை என்றபோதும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் பயோ பார்மசி துறையில் ரூ. 10 ஆயிரம் கோடி முதலீட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட்டுள்ளார். இதனால், உலகளவில் இந்த துறையில் இந்தியா முன்னணி மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், இந்தியாவை உலகளாவிய பயோ-பார்மா மையமாக மாற்றும் நோக்கில் ‘பயோ-பார்மா சக்தி’ (Biopharma Shakti) என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதன் மூலம் புற்றுநோய், நீரிழிவு மற்றும் அரிய வகை நோய்களுக்கான விலையுயர்ந்த மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
Feb 01, 2026 12:09 PM IST


