Last Updated:
ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட், உள்நாட்டு உற்பத்தியையும் சுகாதாரத்தையும் மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
2026-27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி மாற்றங்களால், சாமானிய மக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பல தரப்பினருக்கும் பாதிப்புகளும் சலுகைகளும் கிடைத்துள்ளன.
குறிப்பாக, ஆரோக்கியம் மற்றும் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும் வகையில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் மீதான சுங்க வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
மேலும், மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
வெளிநாட்டு சுற்றுப்பயணம் மற்றும் கல்விக்காகப் பணம் அனுப்புவோருக்கு நிம்மதி தரும் வகையில், அதன் மீதான டி.சி.எஸ் (TCS) வரி 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சோலார் பேனல் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி பாகங்கள் மீதான வரி விலக்கினால், பசுமை ஆற்றல் சார்ந்த பொருட்களும் மலிவாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், சில பொருட்களின் விலை உயர்வது தவிர்க்க முடியாததாகியுள்ளது. குறிப்பாக, ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் சிகரெட், பீடி மற்றும் புகையிலை பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயரும்.
இறக்குமதி செய்யப்படும் சொகுசு கைக்கடிகாரங்கள், மதுபானங்கள் மற்றும் காபி தயாரிக்கும் இயந்திரங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்கள் இனி கூடுதல் விலைக்கு விற்கப்படும்.


