மேலும் “அமெரிக்க ராணுவத் தளங்கள் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒரு பாதுகாப்பைத் தருவதை விட, அவை ஒரு சுமையாக மாறியுள்ளன” என அப்துல்லா பேசியுள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் தளப்பதிவில் அவர், “ஈரானின் தாக்குதல்களில் இருந்து எங்களைத் தற்காத்துக் கொள்ள தேவையான அனைத்து விஷயங்களும், உள்நாட்டளவில் எங்களிடமே இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி, எங்களை நாங்கள் நிரூபித்துவிட்டோம். எனவே முன்பு இருந்தது போல அமெரிக்காவின் பாதுகாப்பு இனி அமீரகத்துக்கு தேவையில்லை. வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்க தளவாடங்கள் நீக்கப்பட வேண்டும்” என்றுள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தான் இதைக் கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


