2005 – ம் ஆண்டு சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான விரிவான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் பிரதிபலிப்பாக, சூடானில் உள்ள ஐ.நா தூதரகம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பாதுகாப்பு பணியில், ஐ.நா சபையில் இருக்கும் உறுப்பு நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை ஈடுபடுத்தி வருகிறது. இந்த நிலையில், சூடானில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு மத்தியில் அவ்வப்போது நல்லிணக்க விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.
அதன் அடிப்படையில், இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா ராணுவம் வெற்றி பெற்றிருக்கிறது. அந்தப் போட்டி நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த வீடியோவை ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது ஒரு நட்புரீதியான, உற்சாகமான போட்டி எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

