Last Updated:
Trump Tariffs: அமெரிக்காவின் வரி விதிப்பை பயன்படுத்திக் கொண்டு மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் திட்டங்களின் கொள்கையை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 26 சதவீதம் அமெரிக்க உயர்த்தியதற்கு பட்டயக் கணக்காளர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப அமெரிக்கா வரிகளை மாற்றி அமைக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மேலும் பரஸ்பர வரி விதிப்பு முறைக்கு மாறுவதே அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய திருப்பூர் ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம், ஆசிய நாடுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பு பெருகும் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய ஜவுளித்துறைக்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும், போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த வரி உயர்வு குறைவாகவே உள்ளதாகவும் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.
பட்டயக் கணக்காளர் சுந்தரராமன், அமெரிக்காவின் வரி விதிப்பை பயன்படுத்திக் கொண்டு மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் திட்டங்களின் கொள்கையை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
அதேபோல், இந்த வரி உயர்வு அமெரிக்காவுக்கு உகந்ததல்ல என்றும், அமெரிக்காவின் வரி விதிப்பால் உருவாகும் பணவீக்கத்தால் அந்நாட்டு மக்களே பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளதாகவும் தணிக்கையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், புதிய வரி உயர்வால் ஜவுளித் துறையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.
April 04, 2025 10:40 AM IST
Trump Tariffs: இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்வு.. பட்டயக் கணக்காளர்களின் கருத்து என்ன?


