இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்தது பற்றி பேசியுள்ள அதிபர் டிரம்ப், அரங்கத்தில் இருந்து 150 மீட்டர் தொலைவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகக் கூறினார். இதில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மீது குண்டு பாய்ந்ததாகவும், அவர் குண்டு துளைக்காத கவச உடை அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார். மேலும், “தாக்குதல் நடத்தியவருக்கும் ஈரானுக்கும் தொடர்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர் தனி ஒருவராகச் செயல்பட்டிருக்கலாம். அவர் நோயாளியாக இருக்கலாம்” என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.


