வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
நாங்கள் (நானும் என்னுடைய கணவரும்) ஜப்பான், சீனா சென்றிருந்த பொழுது வியந்து பார்த்த ஒரு இடம்தான் டெரகோட்டா அகழ்வாராய்ச்சி என்னும் தலம்.
ஜப்பான் தொழில் நுட்பத்தில் சிறந்தது என்றால் சீனா கட்டிடக் கலைக்கும் இயற்கைக்கும் சிறந்தது ஆகும்.
சீனாவின் Xian என்ற இடத்தில் விவசாயிகள் 1970 களில் கிணறு தோண்டும் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது அங்கே பூமிக்கடியில் ஆயிரக்கணக்கில் பொம்மைகள் இருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போனார்கள்.

அது Qin Shi Huang என்னும் அரசன் 246 BC-யில் தனது 13வது வயதில் முதல் அரசனாக வந்தவர். தான் இறந்த பிறகு ஆத்மா சொர்க்கத்துக்குப் போய்விடும்.
அதோடு தன்னுடைய பரிவாரங்களும் கூடவே போய் விடும். ஆனால் தன்னுடைய உடம்பின் பாதுகாப்பிற்காகப் பரிவாரங்கள் வேண்டும் என்று நினைத்தார்.
ஆகவே அவர் 210 BC-யில் இறந்த பிறகு அவருடைய சமாதிக்கு அருகில் Terra cotta வில் பொம்மைகள் செய்து புதைத்து விட்டார்கள்.
இதில் விசேஷம் ஒவ்வொரு முகமும் வேறு வேறாக இருந்தன. ஒரே மாதிரி முகம் இல்லை. பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தோம்.

8,000 வீரர்கள், 130 ரதங்கள், 520 குதிரைகள் உடன் புதைக்கப்பட்டிருக்கின்றன. அது 4 பெரிய பள்ளங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பள்ளம் என்பது 153,493 சதுர அடி ஆகும்.
பெரிய கட்டிடத்திற்குள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். எனக்குச் சிவகங்கை கீழடியுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.

எந்த அளவுக்கு நாம் பழங்காலச் சின்னத்திற்கு மதிப்பு கொடுக்கிறோம் என்று. இன்னும் உள்ளே நிறைய இருக்கலாம் என்பது அவர்களது எண்ணம். 3வது பள்ளத்தில் வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

