19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல் சேலம், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது

