சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதம் துவக்கத்திலிருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டு வந்த நிலையில் நேற்று மாதத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் மதுரையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மதுரையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 635க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 715 ஆகவும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53 ஆயிரத்து 720 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட்ஆபரணதங்கம் நேற்று ரூ.5 ஆயிரத்து 435க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 501ஆகவும், சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்து 8 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.87 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.87 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
