இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சவுதாமணி மீது, கலகம் செய்வதற்கு தூண்டுதல், பொது அமைதியைக் குலைத்தல், வதந்தி பரப்புதல், குழந்தைகளுக்கு மதுபானம் வழங்குதல், சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் குழந்தையின் அடையாளங்களை வெளியிடுதல் என 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.