Last Updated:
Titanic: இந்த டைட்டானிக் கப்பல் விபத்து ஹாலிவுட் படமாகவும் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம்.
டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த ஒருவர் எழுதிய கடிதம், லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
உலகின் மிகப் பிரம்மாண்டமான சொகுசு கப்பலான டைட்டானிக் கப்பல், 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குச் சென்றது. இது உலகப் புகழ்பெற்ற கப்பலாகும். ஆனால், இந்த டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே அட்லாண்டிக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த டைட்டானிக் கப்பல் விபத்து ஹாலிவுட் படமாகவும் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். அந்த வகையில், டைட்டானிக் கப்பலில் இருந்து, கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி என்பவர் எழுதிய ஒரு கடிதம் லண்டனில் ஏலத்துக்கு விடப்பட்டது. இதை ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் என்பவர் சுமார் 3 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
இந்த கடிதத்தில் பயணம் நிறைவு செய்த பிறகே சிறந்த கப்பல் என்று தீர்ப்பு வழங்க முடியும் என்று எழுதியுள்ளதாகத் தெரிகிறது. இந்த கடிதம் ஒரு தீர்க்க தரிசனமாக பார்க்கப்படுகிறது. கடலில் பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் மூழ்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு இந்த கடிதம் எழுதப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 28, 2025 9:28 AM IST
Titanic: டைட்டானிக் மூழ்குவதற்கு முன்பே கணித்த பயணி? வெளியான கடிதத்தில் பகீர்.. கடிதம் ரூ.3 கோடிக்கு ஏலம்!


