Last Updated:
உடல் முழுவதும் தங்க ஆபரணங்களை கிலோ கணக்கில் போட்டுக் கொண்டு வலம் வந்த நபருடன் நகை பிரியர்கள் பலரும் செல்பி எடுத்து கொண்டனர்.
ஏழுமலையானை பிரமிக்க வைக்கும் அளவுக்கு, திருப்பதியில் நடமாடும் நகைக்கடையாக உலா வந்த நபர் அணிந்திருந்த நகை போலி என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றிருந்தார். தங்கம் விற்கும் விலையில், உடல் முழுவதும் தங்க ஆபரணங்களை கிலோ கணக்கில் போட்டுக் கொண்டு வலம் வந்தார். நகைப் பிரியர்களும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த தகவல் டெல்லியில் உள்ள வருமானவரித்துறைக்கு தெரியவர, நேரில் சென்று சுரேஷ்குமாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் தங்கம் அல்ல, போலி என்பது தெரியவந்தது.
அத்தனையும் நடிப்பா? என நடமாடும் நகைக் கடக்காரரிடம் அல்லோலப்பட்ட அதிகாரிகள், இப்படியும் ஒரு விசித்திர ஆளா என புருவத்தை உயர்த்தினர்.
கோல்ட்மேன் என்ற புனைப்பெயரில் ஆந்திரா, தெலங்கானாவில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி வரும் இவர், கடந்த 6 ஆண்டுகளாக வருமான வரி கூட செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
Tirupati,Chittoor,Andhra Pradesh


