Last Updated:
2024 ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி ஆகியோர் 407 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடைகளை வழங்கி உள்ளார்கள்
பிரபல டைம் இதழ், உலகின் சிறந்த 100 நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மனாக இருக்கும் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவியும், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவருமான நீடா அம்பானி ஆகியோர் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 407 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை வழங்கியுள்ளனர். இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகளில் எந்த ஒரு நபர்களும் செய்யாத அறச் செயலாக உள்ளது.
இந்த நிலையில், இருவரின் சமூக அக்கறையை அங்கீகரிக்கும் விதமாக, உலகின் பிரபல இதழான, அமெரிக்காவை சேர்ந்த டைம் பத்திரிக்கை, உலகின் 100 நன்கொடையாளர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியை இடம்பெறச் செய்துள்ளது.
இது குறித்து டைம் இதழில் கூறப்பட்டுள்ளதாவது, “110 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வர்த்தகம் செய்து வருகிறது. முகேஷ் அம்பானி, ரிலையன்ஸின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு, அந்த நிறுவனத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
அவரது மனைவி நீடா அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக இருந்து, ஏராளமான தொண்டுகளை இந்தியர்களின் நலனுக்காக செய்து வருகிறார்.
கல்வி உதவி, பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை வழங்குதல், கிராமப்புறங்களில் மேம்பாடு, வேளாண்மை உதவி, நீர் நிலைகளை பாதுகாத்தல் திட்டங்கள், மருத்துவமனை கட்டுவதற்கான உதவி என ஏராளமான செயல்களை நீடா அம்பானி செய்து வருகிறார்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி ஆகியோர் 407 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடைகளை வழங்கி உள்ளார்கள்” என்று டைம் இதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.


